இவருக்கு பதில் இவரா..? இனி இவங்க தான் சந்தியாவா.. வைரலாகும் போட்டோஸ்
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ராஜா ராணி 2. ராஜா ராணி முதல் சீசனில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஒன்றாக நடித்து அந்த சீசன் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது சித்து, ஆலியா மானசா மற்றும் பலர் நடிப்பில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியல் பொறுத்தவரைக்கும் இதில் ஆலியா மானசா நடிக்கும் சந்தியா கதாபாத்திரம் ஒரு ஐபிஎஸ் ஆகவிருக்கும் ரோல். தற்போது, ஆலியா மனசா 2வது முறையில் கருத்தரித்து உள்ள நிலையில், அந்த கேரக்டரில் தற்போது யார் தொடர போகிறார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
அந்த வகையில், அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், குழந்தை பிறந்து கொஞ்ச நாள் கழித்து அவர் மீண்டும் தொடருவார் என சொல்லப்படுகிறது.
தற்போது, பிரபல சீரியல் நடிகையான சரண்யா துரடி போலீஸ் உடையில் போட்டோ போட்டுள்ளார்.
இதனைப் பார்த்த பலரும், அப்போ நீங்க தான் இனி சந்தியாவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.