M.E, M.Techபடிப்புக்கான 2 தேர்வுகள் ஒத்திவைப்பு.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு..
தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது, இதனால் தொலைதூரக் கல்வியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான நேரடித் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, பிப்ரவரி 20ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு மார்ச் 9ம் தேதிக்கும், 21ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு மார்ச் 10ம் தேதிக்கும் தள்ளிவைக்கப்டுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்களுக்கு நேரடியான முறையில் தேர்வு நடத்தப்படும் என சொல்லப்பட்டு, ஆனால் தற்போது தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்தல் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டும் நேரடி முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் தினமான இன்று மற்றும் திங்கட்கிழமை நடக்கவிருந்த தேர்வுகள் மாற்றி வைக்கப்பட்டு உள்ளது.