காப்பி சர்ச்சையில் சிக்கிய ஜெயிலர் பட போஸ்டர்.. போட்டோவுடன் பதிவிட்டு நெல்சனை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘தலைவர்169’. சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
தொடர் வெற்றி படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் தலைவர்169 இவர் இயக்கமாட்டார் என தகவல் பரவி வந்த நிலையில், ரஜினி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர்169 பட போஸ்டரை பதிவிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தலைவர் 169 படம் இந்த ஆண்டு தீபாளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷுட்டிங்கே ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தான் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட் தகவலாக, தலைவர்169 படத்தில் ரஜினிக்கு வில்லனாக கன்னட மெகா ஸ்டார் சிவ ராஜ்குமார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பதாக அப்டேட்கள் வெளியானது.
இதுவரை பாலிவுட், டோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகர்களை தமிழ் படங்களில் வில்லனாக நடிக்க வைத்து வந்தனர். கேஜிஎஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, கன்னட திரையுலகின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது என சொல்லப்படுகிறது.
ரஜினியின் தீவிர ரசிகனான சிவகார்த்திகேயன் தற்போது ரஜினி படத்தில் அவரின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கிளப்பியது.
தலைவர் 169 படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு உள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சிறையில் தான் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய், முக்கியமான ரோலில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க போவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடித்து மாஸ் காட்டி இருந்த ரம்யா கிருஷ்ணன், தற்போது அவருக்கு ஜோடியாக நடிப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
தற்போது, நேற்று வெளியிடப்பட்ட ஜெயிலர் படத்தின் போஸ்டர் காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது. அந்த போஸ்டரில் ரத்தக் கறையுடன் ஒரு கத்தி தொங்குவது போன்றும் பின்னணியில் பாழடைந்த தொழிற்சாலை இருப்பது போன்றும் போஸ்டர் வெளியானது. அந்த பின்னணியில் உள்ள தொழிற்சாலையின் புகைப்படத்தை கூகுளில் எடுத்து ஜெயிலர் படக்குழு பயன்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது.
அந்த தொழிற்சாலையின் ஒரிஜினல் போட்டோவை தேடி பிடித்த நெட்டிசன்கள், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, போட்டோஷூட் கூட நடத்தாமல் இவ்வளவு அலட்சியமாகவா போஸ்டரை வெளியிடுவீர்கள் என இயக்குனர் நெல்சனை சாடி வருகின்றனர்.