சுற்றிலும் சிறுநீர்.. கழிவுகள்.. தரையில் படுத்தபடி ரொமான்ஸ்.. சினேகா பகிர்ந்த பகீர் சம்பவம்..!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. 90ஸ் கிட்ஸ்களின் பலரது கனவுக்கன்னியாக இருந்த இவர், இங்கனே ஒரு நிலபக்ஷி என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.
இதனைத் தொடர்ந்து, என்னவளே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனார்.
தெலுங்கில், பிரியமைனா நீக்கு என்னும் சூப்பர் ஹிட் படத்தின் மூலம் அறிமுகமான இவர், வெங்கி, ராதா கோபாலம், ஸ்ரீ ராமதாசு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர், ஒரு சில கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
உன்னை நினைத்து படத்திற்காக பிலிம்பேர் விருதினையும், விரும்புகிறேன், ஆனந்தம், புன்னகை தேசம், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட படங்களுக்காக விஜய் விருது மற்றும் தமிழக தேசிய விருதையும் பெற்றார்.
இப்படி 25திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், சில நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தும் வருகிறார். இதற்கிடையே, 2009ம் ஆண்டு பிரசன்னா உடன் இவர் நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் இவர்களிடையே காதல் மலர, இருவீட்டாரின் சம்மதத்துடன், 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது 1 மகளும் 1 மகனும் உள்ளனர்.
இறுதியாக பட்டாசு படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இந்நிலையில், இவரது பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆரம்ப காலத்தில் சினேகா - பிரஷாந்த் ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம் விரும்புகிறேன்.
அந்தப் படத்தில் ரொமான்ஸ் காட்சியில் நடித்தது குறித்து அவர் பேசியுள்ளார்.
படத்தில் ஆட்டு மந்தைக்குள் நடிக்கும் காட்சி மிகவும் கொடூரமாக இருந்ததாக இவர் தெரிவித்துள்ளார். சில சீன்கள், உண்மையான ஆட்டு மந்தையில் எடுத்ததால், எங்களை சுற்றியும் சிறுநீர், ஆட்டு கழிவுகளும் இருக்கும், உண்மையான ஆடுகளும் இருக்கும், ஆனாலும் தரையில் படுத்த படி ரொமான்ஸ் செய்ய வேண்டும்.
ரொமான்ஸ் காட்சிகள் பார்க்கும் பொது எப்போதும் மிகவும் சிறப்பாக தான் இருக்கும் ஆனால் அங்கு வேறு மாதிரி தான் இருந்தது என கூறியுள்ளார்.