சொந்த ஊருக்கு ஒரு சின்ன ட்ரிப்.. திருநள்ளாறு தரிசனம்.. வைரலாகும் SK செல்பி போட்டோஸ் !
சாதாரண காமெடியானாக தனது பயணத்தை தொடங்கி தற்போது மிக பெரிய நடிகராக மாறியுள்ளவர் நடிகை சிவகார்த்திகேயன். மிமிக்ரி, டிவி தொகுப்பாளர் என படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் இம்ப்ரெஸ் செய்த சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டாக்டர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, விரைவில் டான் திரைப்படம் வெளியாகவுள்ளது.
டான் படத்தை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில் உருவாக இருக்கும் SK 20 படத்தில் இணைகிறார். காரைக்குடி, பாண்டிச்சேரி பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் திருவீழிமிழலை, திருநள்ளாறுக்கு சென்றுள்ளார் SK . இதில் திருவீழிமிழலை சிவகார்த்திகேயனின் சொந்த ஊர். இந்தியாவின் பெருமைமிக்க தலைசிறந்த நாதஸ்வர கலைஞர்கள் ஆன சுப்பிரமணியம் பிள்ளை, நீடாமங்கலம் தவில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இருவரும் சிவகார்த்திகேயனின் கொள்ளுத்தாத்தாக்கள் ஆவர்.
‘திருவீழிமிழலை சகோதரர்கள்’ என பேர் வாங்கிய கோவிந்தராஜப் பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை இருவரும் சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள். திருவீழிமிழலைக்கு சென்ற சிவகார்த்திகேயன் அங்குள்ள பள்ளிக்கு சென்று மாணவர்களையும், மக்களையும் சந்தித்த பின், திருநள்ளாறு கோயிலுக்கு சென்றார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றன.