'இது தான் பேரின்பம்'... தனுஷ் குறித்து செல்வராகவன் இன்ஸ்டாகிராம் பதிவு: நெகிழ்ந்து போன தனுஷ் செய்த செயல்..!!

Selvaragavan posts about dhanush on his social media getting viral

தனுஷின் புகைப்படத்தை வெளியிட்டு செல்வராகவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள போஸ்ட் வைரலாகி வருகிறது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படம் இன்று மாலை 5 மணிக்கு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து தனுஷ் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்திலும், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் ‘வாத்தி’ படத்திலும் நடித்து வருகிறார்.

இதில் நானே வருவேன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை கடந்த ஆண்டே முடித்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை தற்போது முழு வீச்சில் நடத்தி வருகிறது. செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சிறப்பு போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. செல்வராகவன் இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் வருகிறார்.

Selvaragavan posts about dhanush on his social media getting viral

இந்நிலையில் செல்வராகவன் நானே வருவேன் படப்பிடிப்பு தளத்தில் தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “ஒரு நடிகர் உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் அதுதான் பேரின்பம்” எனக் குறிப்பிட்டு தனுஷை புகழ்ந்துள்ளார்.

Selvaragavan posts about dhanush on his social media getting viral

இந்த படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.

Share this post