கேங்க்ஸ்டராக மாறும் நடிகை சரண்யா பொன்வண்ணன்..
தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்றாலே நினைவுக்கு இவர் முகம் தோன்றும் படி வேரூன்றிய நடிகை சரண்யா பொன்வண்ணன். முக்கியமாக முத்துக்கு முத்தாக, வேலையில்லா பட்டதாரி, எம்டன் மகன் உள்ளிட்ட திரைப்படங்களில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர்.
அப்படிப்பட்டவரை கேங்ஸ்டராக மாற்றியுள்ளார் இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணன். புதிய படத்தில் அவர் கேங்ஸ்டராக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘நான் சரண்யா ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் அவர் நடிக்கும் ஸ்டீரியோடைப்பை உடைக்க விரும்பி, அந்த கதாபாத்திரத்திற்காக சரண்யா மேடத்தை அணுகினேன். அவர் ஒரு பல்துறை நடிகை, அவர் திரைக்கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக இருப்பார் என்று நான் உணர்ந்தேன்’ என்கிறார் இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணன்.
இவர் பிரபுதேவாவின் ஊமை விழிகள் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இப்படத்தில் ராஜ் வர்மா வில்லனாகவும், அம்சத் கான் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். நிறைய சண்டைக் காட்சிகள் மற்றும் துப்பாக்கி சுடும் காட்சிகளும் இருந்ததால், முதலில் கேங்ஸ்டராக நடிக்க சரண்யா பொன்வண்ணன் ஒத்துக் கொள்ளவில்லையாம்.
இக்காட்சிகள் தனது இமேஜுக்கு செட் ஆகுமா என தயங்கிக் கொண்டுதான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். சண்டை காட்சியில் நடிக்கிற அன்றும் அவர் டென்ஷனாகவே இருந்திருக்கிறார். சரண்யா பொன்வண்ணன் இதில் ரிட்டையர்ட் கேங்ஸ்டராக வருகிறார்.
குடும்பத்துடன் அமைதியாக வாழ்க்கை போய்க்கொண்டிருக்கையில் குடும்பத்திற்கு ஒரு பிரச்சினை வருவதால், மீண்டும் அவர் பழைய கேங்ஸ்டராக மாறி பிரச்சனையை முறியடிப்பதுதான் படத்தின் கதை. சீரியஸான கேங்க்ஸ்டர் படம் என்றாலும் குடும்பம் சென்டிமெண்ட் நகைச்சுவை கலந்து படத்தை எடுத்திருப்பதாக விஷ்ணு ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.