குழந்தை விஷயத்தில் குட் நியூஸ் சொல்ல போகும் சமந்தா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

samantha going to adopt 2 child after her divorce under her trust

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

samantha going to adopt 2 child after her divorce under her trust

தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன் இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர்.

பின்னர், திடீரென மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்றும் வந்தார். சினிமாவில் முழு கவனம் செலுத்த முடியாமல் போன நிலையில், சிகிச்சைக்காக தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.

samantha going to adopt 2 child after her divorce under her trust

இதன் நடுவே, பிரதியுஷா என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் சமந்தா. அதன் மூலமாக பல்வேறு சமூகம் சார்ந்த நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இந்நிலையில், அந்த நிறுவனம் மூலமாக சமந்தா இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

Share this post