கதைக்காக அப்படி ஒரு அருவருப்பான காட்சியில் நடித்தேன்.. இன்னும் அதை நினைத்து வேதனைப்படுகிறேன்.. சதா Open Talk..!

தமிழ் மொழியில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா. இதனைத் தொடர்ந்து, திருப்பதி, பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் எனப் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்த சதா, தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சதா, தனது நிஜ மற்றும் சினிமா வாழ்க்கையில் நடந்த கசப்பான சில நிகழ்வுகள் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், தேஜா(ஜெயம்) படத்தில் ஒரு மோசமான காட்சியில் நடித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். என் கன்னத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது.
இது போன்ற காட்சியில் நடிக்கமாட்டேன் என்று இயக்குனரிடம் சொன்னேன். ஆனால் படத்தில் இந்த காட்சி வேணும் என சொல்லி நடிக்க சொன்னார். அந்த காட்சியை எடுத்த பின் வீட்டுக்கு சென்று அழுததாகவும் சதா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.