Trending Video: சிறுநீர் கேட்ட ரச்சிதா.. என்னது சிறுநீரா? செய்வதறியாது திணறிய ராபர்ட் மாஸ்டர், ராம்.. அட கடவுளே..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
கமல் வார்னிங் கொடுத்ததால் கடந்த இரண்டு வாரங்களாக சைலண்டாக இருந்து வந்த அசீம், வேதாளம் முருங்க மரம் ஏறுன கதை போல் தற்போது மீண்டும் கத்தி ஆக்ரோஷமாக விக்ரமனுடன் இந்த டாஸ்க்கின் போது சண்டையிட்டுள்ளார். ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரக்ஷிதாவும் மந்திரியாக விக்ரமனும், படைத்தளபதியாக அசீமும் உள்ளனர்.
நேற்று இந்த டாஸ்க்கில் ஒரு பக்கம் அசீம் - விக்ரமன் இடையே பிரச்சனை எழுந்த நிலையில் இன்னொரு பக்கம் ராபர்ட் மற்றும் ரக்சிதாவின் ரொமான்ஸ் காட்சிகளும் ஓடி வருகின்றன. இந்நிலையில், அரசி ரக்சிதாவிடம் படை வீரர்களில் ஒருவரான ராம், ‘உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, அதற்கு அரசி ரக்சிதா, ‘உங்களது கவனிப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது எனக்கு சிறுநீர் வேண்டும்’ என்று கூறுகிறார்.
இதை அடுத்து ராம் அந்த இடத்தை விட்டு அகன்றார். சிறிது நேரம் கழித்து அரசர் ராபர்ட் இடம் அரசி ரக்சிதா ‘நான் சிறுநீர் வேண்டும் என்று கேட்டேன் இன்னும் வரவில்லை’ என்று கூற ராபர்ட் மாஸ்டர் செய்வதறியாது திகைத்து அந்த இடத்தை விட்டு நகர்கிறார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
ஆனால் பண்டைய கால அரசர்கள் சிறிதளவு நீர் என்பதை சிறுநீர் என்று அழைத்து வருவார்கள் என்றும் சிறுவாணி ஆற்றின் நீரை கூட சிறுநீர் என்றுதான் அழைத்து வருவார்கள் என்றும் சில நெட்டிசன்கள் விளக்கமளித்துள்ளனர். ஆனால் நாளடைவில் சிறுநீர் என்பதற்கு வேறு அர்த்தம் ஏற்படும் வகையில் வந்து விட்டது என்பதால் எனவே ரக்சிதா சிறுநீர் என கூறியது அவருடைய கேரக்டருக்கு சரிதான் என ஒருசிலர் கூறிவருகின்றனர்.
சிறுநீர் ஆ... சிறு நீர் ஆ.. 😛 pic.twitter.com/CP7Vrbqeoy
— News Reader Ranjith (@NewsRanjith) November 16, 2022
#Rachitha : “Manna enaku சிறுநீர் vendum”! Unga tamil arumai👏🏻😂😂 #BiggBossTamil6 #BiggBossTamil #BigBoss6tamil #biggboss @ikamalhaasan pic.twitter.com/oOoTWPpemm
— Deepak Srinivasan (@deepak_seenu) November 16, 2022