பிக்பாஸ் சீசன் 6'ல் பங்கேற்கும் சர்ச்சை நடிகை ?! ஆஹா.. இனி பரபரப்புக்கு பஞ்சமே இருக்காதே !
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல் 3 வாரமும், மீதம் சிம்பு அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த சீசன் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
OTT தள 24 மணி நேர ஷோவில் 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் பங்கேற்றனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அரசியல், ஷூட்டிங் என பிசியாக இருப்பதால் விலகுவதாக கமல் கூறி விட்டு விலகவே, சிம்பு மீதமிருந்த வாரங்கள் தொகுத்து வழங்கினார்.
அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 6 துவங்கப்பட்டால், அதில் தொகுப்பாளராக கமல்ஹாசன் வருவாரா? சிம்பு வருவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கவதற்கான ஏற்பாடுகள் மற்றும் போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி விரைவில் துவங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதில் VJ ரக்ஷன், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி, சுசித்ராவின் முன்னாள் கணவர் காரத்திக் குமார், இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி, டிடி, பாலிமர் நியூஸ் சேனல் பிரபல செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
இந்நிலையில், சமீப காலமாக, சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கிளப்பி வந்த பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி இந்த சீசனில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த 7C சீரியல் தொடர் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரீநிதி. இதனைத் தொடர்ந்து, பகல் நிலவு, வள்ளி போன்ற சீரியல் தொடர்களில் நடித்து வந்தார். இறுதியாக, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி என்னும் பிரபல தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த சில மாதங்களாக சிம்புவை காதலிப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தவர், திடீர் என சிம்புவை அண்ணா என கூறினார். அதே போல் தன்னுடைய தோழியான பிரபல சீரியல் நடிகை நட்சத்திரா பற்றியும் சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது சீரியல் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் இவரிடம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூறி நிகழ்ச்சியாளர்கள் அணுகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இந்த நிகழ்ச்சியில் இணைந்தால் கண்டிப்பாக பரபரப்பான கன்டென்ட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.