திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு சுடச்சுட அன்னதானம் வழங்கிய பிரபல தமிழ் பட நடிகை !
படிப்பில் முக்கியத்துவம் கொடுத்து படித்து வந்த ராஷி கண்ணா, மாடலிங் அல்லது நடிகை ஆவது விருப்பம் இல்லையாம். விளம்பர திரைப்படங்களுக்கு கதை மற்றும் ஸ்க்ரிப்ட் எழுதி வரும் வேலையை செய்து வந்தார். இதன் மூலம் திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வர தொடங்கின.
ஹிந்தி மொழி திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் திரையுலகில் அறிமுகமான ராஷி கண்ணா, மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
பின்னர், மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், இமைக்க நொடிகள் திரைப்படத்தில் அதர்வா ஜோடியாக நடித்தார். பின்னர், அடங்க மறு, அயோக்கியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்தார். திரைப்படங்கள் மட்டுமல்லாது வெப் சீரீஸ்களிலும் நடித்து வரும் ராஷி கண்ணா, தற்போது அடுத்தடுத்து சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
தற்போது தனது ஹாட் புகைப்படங்களை செம கவர்ச்சி போஸ் கொடுத்து அதனை இணையத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வருகிறார். தி ஃபேமிலி மேன் புகழ், ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி.கே இயக்கத்தில் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதியுடன் ஃபார்ஸி என்ற வெப் தொடரிலும் ராஸி கன்னா நடித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கில் ராஷி கண்ணா, கோபிசந்த் உடன் இணைந்து நடித்துள்ள “பக்கா கமர்ஷியல்” படத்தின் ரிலீஸை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் & வீடியோ வெளியாகி ரசிகர்களிடமும், பொது மக்களிடமும் வரவேற்பை பெற்று வருகிறது.