நெருக்கமாக முத்தமிடும் போட்டோவை வெளியிட்ட ரவீந்தர்.. 4 சுவற்றுக்குள் நடக்கும் விஷயங்களை இப்படி பதிவிடலாமா? விளாசும் நெட்டிசன்கள்
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் டாபிக்காக வலம் வருவது தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமண விஷயம் தான். ரவீந்தர் சந்திரசேகரன், தமிழ் திரையுலகில் சுட்ட கதை, முருங்கைக்காய் சிப்ஸ், கொலை நோக்கு பார்வை, கல்யாணம் போன்ற பல திரைப்படங்களை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக வலம் வருபவர்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மி அவர்களை திருமணம் செய்து கொண்டார். படிக்கும் காலத்திலேயே கலை துறையில் அடியெடுத்து வைத்த இவர், நிறைய சீரியல்களில் நடித்துள்ளார்.
முக்கியமாக பல தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அன்பே வா, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் போன்ற பல பிரபல தொடர்களில் நடித்துள்ளார்.
தற்போது, ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவருக்குமே இது 2வது திருமணம். இந்நிலையில், இவர்கள் திருமணம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் புகைப்படங்கள் ஏதாவது பதிவிட்ட வண்ணம் உள்ளனர். இவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் தான், இன்ஸ்டாவில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்தளவிற்கு இருவரும் வைரல் ஜோடிகளாக ஆகி விட்டனர்.
இவர்கள் திருமணம் ஆகி ஒரு மாதம் ஆன நிலையில், “People smile us for 100 reason.. My happniess have one reason its U LOVE YOU “MAYULU” “ என சொல்லி ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்
இதன் நடுவே, மஹாலக்ஷ்மி பெட்ரூமில் தூண்டும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதனால், இருவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள் என நெட்டிசன்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், தற்போது மகாலட்சுமி தன் கணவர் ரவீந்தருக்கு கன்னத்தில் இருக்கமாக முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் கடவுளே உனக்கு கண் இல்லையா என்றும் தனிப்பட்ட புகைப்படங்களை ஏன் இப்படி இணையத்தில் பதிவிடுகிறீர்கள் என்று கடுமையாக தாக்கி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.