"கதிஜா" சமந்தாவிற்கு பதில் இந்த நடிகை தான் நடிப்பதாக இருந்தது? விக்கி வெளியிட்ட தகவல்..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படம் மூலம் அறிமுகமானவர் . இவர் விஜய்சேதுபதியை வைத்து இவர் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இப்படத்தின் மூலம் தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதையடுத்து சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக இவர் இயக்கத்தில் எந்த படமும் ரிலீசாகாமல் இருந்த நிலையில், மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார்.
முக்கோண காதல் கதையாக உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா என்கிற கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். நடிகை சமந்தாவின் பிறந்தநாளான இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
அனிருத் இசையில் பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையும் பிரமாதம். விக்னேஷ் சிவன் திரைக்கதைக்கு ரொம்பவே மெனக்கெட்டு எழுதியிருப்பது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. பல இடங்களில் காமெடி பக்காவாக வொர்க்கவுட் ஆகிறது. அதை விட உணர்ச்சிகரமான தருணங்கள் அந்த ஃபீலை நல்லாவே கொடுக்கிறது. நயன்தாரா, விஜய்சேதுபதியை விட சமந்தா காஸ்டிங் தான் இந்த படத்திற்கு பெரிய பலம்.
அனிருத் இசையில் பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையும் பிரமாதம். விக்னேஷ் சிவன் திரைக்கதைக்கு ரொம்பவே மெனக்கெட்டு எழுதியிருப்பது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. பல இடங்களில் காமெடி பக்காவாக வொர்க்கவுட் ஆகிறது. அதை விட உணர்ச்சிகரமான தருணங்கள் அந்த ஃபீலை நல்லாவே கொடுக்கிறது. நயன்தாரா, விஜய்சேதுபதியை விட சமந்தா காஸ்டிங் தான் இந்த படத்திற்கு பெரிய பலம்.
சமந்தாவுக்கு பதிலாக பிரபல நடிகை நடிக்க இருந்ததை சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். நானும் ரவுடி தான் படத்திற்கு முன்னதாகவே இப்படத்தின் கதையை தயார் செய்துவிட்டதாகவும், விஜய் சேதுபதியை மனதில் வைத்து தான் இதன் கதையை எழுதியதாகவும் கூறினார். முதலில் இப்படத்தில் கதிஜா கதாபாத்திரத்தில் திரிஷாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாகவும், சில காரணங்களால் அது கைகூடாமல் போனதால் சமந்தாவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததாகவும் கூறினார்.