மருத்துவமனையில் பரிதாபமாக கிடக்கும் சுனைனா.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சுனைனா. “ராஜா ராஜா சோரா” போன்ற படங்களில் தனது குறிப்பிடத்தக்க நடிப்பிற்காக தெலுங்கு பார்வையாளர்களால் அங்கீகரிக்கப்பட்டார். சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தி உள்ளது.
“எனக்கு சிறிது நேரம் கொடுங்கள்… நான் மீண்டும் வருவேன்” என்ற தலைப்புடன், ஆக்சிஜன் சப்ளையுடன் இணைக்கப்பட்ட மருத்துவமனை படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். இந்த எதிர்பாராத பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் ஒரு துக்கத்தை தூண்டியுள்ளது.
இந்த மருத்துவமனை புகைப்படம் ஒரு திரைப்பட படப்பிடிப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சிலர் நம்புகிறார்கள். மற்றவர்கள் நடிகை சுனைனாவுக்கு உடல்நலக்குறைவால் மருத்துவமனை அனுமதிக்ககப்பட்டு இருக்கலாம் என கருத்துகளை தெரிவித்து வருகிகின்றனர். மேலும், அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களை பொழிகிறார்கள்.