'லைஃப்ல நான் ரொம்ப நம்புன 3 பெண்கள்.. என்ன கீழே தள்ளி விட்டுட்டாங்க.. மறந்துட்டு போன ஒருத்தர தெரியும்'.. தனுஷ் வேதனை
தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் நடிகை வெற்றிமாறன். தனது ஒவ்வொரு படத்திலும் மிக கவனம் செலுத்தி இவர் எடுப்பதை பார்த்து நிறைய சினிமா தொழில் நுட்ப துறையினரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
இவர் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றி படமாக அமைந்து, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தது. அதனைத் தொடர்ந்து, ஆடுகளம் மற்றும் வடசென்னை போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் திரைப்படங்களாக அமைந்தது.
முதல் படம் முதலே வெற்றி தர தொடங்கிய இந்த கூட்டணி, பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை மெகா ஹிட் திரைப்படங்களை தந்து வருகிறது. இதனால் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணையும் திரைப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. வடசென்னை பாகம் 2 உருவாகி வரும் நிலையில், அதன் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
பொதுவாக கதை கேட்டு படங்களில் ஒப்பந்தம் ஆகும் தனுஷ் வெற்றிமாறன் படங்கள் என்றால் கதைகூட கேட்காமல் ஓகே சொல்லும் அளவிற்கு இருவரும் சகோதரர்கள் அளவிற்கு மாறிவிட்டனர். அந்த அளவிற்கு வெற்றி மாறன் மீது தனுஷ் நம்பிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் பேசிய தனுஷ் வெற்றிமாறன் உடனான நட்பு குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது :
‘நான் லைஃப்ல ரொம்ப நம்பிக்கை வெச்ச 4 பேர்ல ஒருத்தர் வெற்றிமாறன்.
மீதி 3 பேரும் பொண்ணுங்க. அவ்வளவு நம்பிக்கையே நான் யாரு மேலயும் வெச்சது இல்ல. பாக்கி 3 பேரும் என்னை கீழே தள்ளி விட்டுட்டாங்க . என் நம்பிக்கையை காப்பாற்றிய ஒரே ஆள் வெற்றிமாறன் மட்டும்தான்.
அதைவிட பெரிய விஷயம் என்னன்னா வெற்றியை சுவைத்து வெற்றிய பார்த்ததுக்கு அப்புறம் என்ன மறந்துட்டு போன ஒருத்தர எனக்கு தெரியும். அதைவிட பெரிய வெற்றியைப் பார்த்த வெற்றிமாறன் தனுஷ விட்டு நான் வரமாட்டேன்னு இன்னும் என் கூட இருக்காரு’.
என கூறியுள்ளார்.