SJ சூர்யாவுக்கு மீது வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. பிரபல இயக்குனர்கள் பாக்யராஜ், வசந்த், சபாபதி உள்ளிட்டோருக்கு அசிஸ்டென்ட் ஆக பணியாற்றிய இவர், வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து, திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் குஷி படத்தை இயக்கினார். இப்படமும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. பின்னர், நியூ படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
கடந்த 5 வருடங்களாக, சிறந்த கதையாக இருந்தால் வில்லன் கதாபாத்திரத்திலும் ஏற்று நடித்து வருகிறார்.
இறைவி, ஸ்பைடர், மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
மேலும், 7 ஆண்டுகளுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா வருமான வழக்கை எதிர்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா வழக்கு தொடர்ந்தார். ‘‘பலமுறை இந்த வழக்கிற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனாலும், வருமான வரி தாக்கல் செய்யவில்லை. இதனால், வழக்குகளை கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டும்’’ என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.