பாரதி கண்ணம்மா புகழ் நடிகை கண்மணி பதிவிட்ட பதிவு ! குழப்பத்தில் ரசிகர்கள் !

Bharathi kannamma fame actress kanmani manoharan insta status getting viral

தமிழ் தொலைக்காட்சி சீரியல் தொடரில் TRPயில் முதல் இடத்தை பல மாதங்களாக பிடித்து வந்த தொடர் பாரதி கண்ணம்மா. பிரவீன் பென்னட் இயக்கிவரும் இந்த தொடரில் ஒரு இல்லத்தரசிக்கு நேரும் இன்னல்கள் குறித்து கூறும் ஒரு கதை. தற்போது இதனை ரசிகர்கள் கொஞ்சம் வெறுக்கும் நிலைக்கு மாறி விட்டது என்றே கூட சொல்லலாம்.

சீரியலை முடிக்க கூடாது என்ற எண்ணத்தில் கதையில் ஏதேதோ வகையில் பயணிப்பது போன்ற எண்ணம் வந்துவிட்டது.

இத்தொடரில் அகிலன் வேடத்தில் நடித்தவர் பட வாய்ப்புகள் அதிகம் வந்த நிலையில் வெளியேறினார். பின் தொடரின் முக்கிய நாயகியான ரோஷினி விலக அவருக்கு பதில் தற்போது வினுஷா நடித்து வருகிறார். ஆனால் ரோஷினி தொடரில் இருந்து விலகியதற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.

Bharathi kannamma fame actress kanmani manoharan insta status getting viral

அடுத்ததாக அஞ்சலி வேடத்தில் நடித்துவந்த கண்மணி வெளியேறினார். அவருக்கு ஜீ தமிழில் அமுதா என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இத்தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற தொடங்கி இருக்கிறது.

கண்மணி ஜீ தமிழில் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியிலும் பங்குபெற்று வருகிறார். இந்நேரத்தில் கண்மணி தனது இன்ஸ்டா ஸ்டோரியில், தப்பான ஆட்களுக்காக ஒரு போதும் வேலை செய்யாதீர்கள் என்ற ஒரு வாக்கியத்தை குறிப்பிட்டு பின்னணியில் பாரதி கண்ணம்மா நீ என தொடங்கும் பாடல் ஒன்றை இணைத்துள்ளார்.

அவரின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எதனால் இந்த பதிவு என நிறைய கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.

Bharathi kannamma fame actress kanmani manoharan insta status getting viral

Share this post