Last Day Shooting.. வீடியோ பதிவிட்ட ஆல்யா மனசா.. இனி அவ்ளோதானா.. ஏன் இப்டி பண்றீங்க புலம்பும் ரசிகர்கள் !
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என ஒளிபரப்பான தொடர் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் தான் நம் ஆலியா மானசா. இந்த தொடரில் நடிக்கும் சமயத்தி, டப்ஸ்மேஷ் செய்து வீடியோ போடுவது, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது என செம பேமஸ் ஆக ரசிகர்களை கவர்ந்தார்.
ராஜா ராணி தொடரில் ஹீரோவாக உடன் நடித்த சஞ்சீவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை இருந்த நிலையில் தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ராஜா ராணி சீசன் 1 தொடர்ந்து, ராஜா ராணி சீசன் 2 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஐபி எஸ் கனவுடன் இருக்கும் ஒரு பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகள் குறித்த கதை ஆகும். சந்தியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா, 2வது பிரசவத்திற்காக சீரியல் இருந்து விடுபெற்றார்.
அதன் பின்னர், இனி ராஜா ராணி 2 தொடரில் தொடர போவதில்லை என்ற இவரது பதிவை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்து இவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்த வண்ணம் இருக்கும் ஆலியா, ராஜா ராணி 2 சீரியல் படப்பிடிப்பு கடைசியாக கலந்துகொண்ட காட்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை ஸ்டேட்டஸ் வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் குழந்தை பெற்று சில மாதங்களுக்கு பிறகு நீங்களே சந்தியாவாக நடிக்கலாமே ஏன் நிறுத்திவிட்டீர்கள் என கேட்டு வருகினற்னர்.