'சினிமாவில் இருந்து விலக போகிறேன்' நடிகர் சித்தார்த் அதிரடி பேட்டி !
பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.
தமிழில், அடடா அடடா (சந்தோஷ் சுப்பிரமணியம்), பார்வதி பார்வதி (காதலில் சொதப்புவது எப்படி) போன்ற பல பாடல்களை பாடியுள்ளார்.
பல விளம்பர படங்களிலும் அவ்வப்போது நடித்துள்ள சித்தார்த், நீண்ட காலமாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவது இவரது வழக்கம்.
சமீபத்தில் அவர் தெரிவித்த மொழி குறித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தைரியமாக அரசியல் கருத்துக்களை பதிவிடுவார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் நல்ல கேரக்டர்கள் கிடைக்கவில்லை என்றால் தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.