முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு ! டி. இமான் புகார் குறித்து வெளியான உண்மை தகவல் !
தமிழ் திரையுலகில் தமிழன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான். இதனைத் தொடர்ந்து, விசில் படத்தில் ‘அழகிய அசுரா’ பாடல் வெற்றியைத் தொடர்ந்து, இவர் பிரபலமாக அறியப்பட்டவர்.
பின்னர், ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ள இமான், திருவிளையாடல் ஆரம்பம், கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களின் பாடலுக்காக பல விருதுகளை வென்றார்.
விஸ்வாசம், சீமராஜா, கடைக்குட்டி சிங்கம், டிக் டிக் டிக், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் போன்ற பிரபல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவரது குரலுக்கும் இசைக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஸ்வாசம் பட இசையமைப்பிற்காக கலைமாமணி விருதை வென்றார்.
இவரது மனைவி மோனிகா அவர்களை பிரிவதாக தனது சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார். நவம்பர் 2020ம் ஆண்டு முதல் பிரிந்து வாழும் இவர்கள், டிசம்பர் 2021ம் ஆண்டு சுமூகமாக பிரிந்தனர். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், இமான் 2வது திருமணம் குறித்து பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன், திருமண வரவேற்பு குறித்து புகைப்படம் ஒன்று வைரல் ஆனது. இந்நிலையில், முன்னாள் மனைவி மீது இமான் பொய் வழக்கு போட்டதாக தகவல் சொல்லப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு இமான் தனது முன்னாள் மனைவி மீது வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். முன்னாள் மனைவி மோனிகா குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டு பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாக புது பாஸ்போர்ட் விண்ணப்பித்து வாங்கி இருக்கிறார் என புகார் சொல்லி இருந்தார்.
இமான் போட்டிருப்பது பொய்யான வழக்கு என முன்னாள் மனைவி மோனிகா தனது தரப்பில் விளக்கம் கொடுத்து இருக்கிறார். குழந்தைகளை கஸ்டடி வைத்திருக்கும் மோனிகாவுக்கு தான் குழந்தைகள் பாஸ்போர்ட் பெற உரிமை இருக்கிறது. அவர் இமானிடம் குழந்தைகள் பாஸ்போர்ட் கேட்டபோது வீடு மாறும்போது தொலைந்துவிட்டது என கூறி இருக்கிறார்.
அதற்கு பிறகு தான் மோனிகா விதிமுறைகள் படி புது பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து இருக்கிறார். இந்த நேரத்தில், இமான் மோனிகா மீதும் பாஸ்போர்ட் அதிகாரிகள் மீதும் பொய்யான வழக்கு போட்டிருக்கிறார். குழந்தைகள் பாஸ்போர்ட் வைத்திருக்க இமானுக்கு சட்டப்படி உரிமை இல்லை என அதிகாரிகள் கூறிவிட்டனர்.
மோனிகாவுக்கு இமான் எந்த வித ஜீவனாம்சமும் தரவில்லை, குழந்தைகள் பராமரிப்புக்கு மட்டும் 5000 ருபாய் தருவதாக சொல்லப்படுகிறது. தற்போது தனது புகழை பயன்படுத்தி முன்னாள் மனைவியின் பெயரை கெடுக்க இப்படி பொய்யான வழக்கு போட்டிருக்கிறார் இமான் என்றும் மோனிகா தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.