பாக்கியலட்சுமி சீரியலில் வெளியேறியது குறித்து இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்த ஆர்யன் !
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், பாக்கியலட்சுமி தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த தொடரில் வரும் செழியன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யன் நடித்து வந்தார்.
இவருக்கு சமீபத்தில் நடிகை ஷபானா அவர்களுடன் காதல் திருமணம் நடந்தது. இந்நிலயில், தற்போது, ஆர்யனுக்கு பதிலாக விகாஷ் சம்பத் என்பவர் செழியனாக நடிக்க தொடங்கியுள்ளார். புதிய செழியன் இடம்பெறும் காட்சிகள் நேற்றில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது.
சீரியலில் இருந்து வெளியேறிய செழியன் இதுவரை அதற்கான காரணம் ஏதும் கூறியது இல்லை. தற்போது முதன்முறையாக சீரியல் குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார் ஆர்யன்.
அதில் எனக்கு இதுநாள் வரை செழியன் வேடத்திற்கு கொடுத்த அன்புக்கு நன்றி, அதேபோல் புதிய செழியனாக வந்திருக்கும் விகாஷ் அவர்களுக்கும் உங்கள் ஆதரவை கொடுங்கள் நன்றி என பதிவு செய்துள்ளார்.