Viral Video: 'நான் நிர்வாணமா நடிச்சா உனக்கென்ன..' பொளந்துகட்டிய ரேகா நாயர்.. 'நீ **** நடிச்சா அப்படித்தான் பேசுவேன்' என அப்பட்டமாக பேசிய பயில்வான்
தமிழ் சினிமாவில் சிறு சிறு முக்கிய கதாபாத்திரங்களிலும், பிரபல காமெடி நடிகராகவும் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தனி யூடியூப் சேனலை தொடங்கி சினிமா வட்டாரத்தில் நடக்கும் பல விஷயங்கள் குறித்து பேசி ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.
சினிமா துறையில் நடக்கும் விஷயங்களோடு விட்டு வைக்காமல், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பகிர்ந்து வருகிறார். நடிகர்-நடிகைகள் பலரும் இவரின் பேச்சு எல்லையை மீறி போவதாக கூறி புகார் கூறி வருகின்றனர். நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி மிகவும் கொச்சையாக பேசி வருவதை ரசிகர்கள் பலரும் கமெண்ட் பகுதியில் வசைபாடி வருகின்றனர்.
தற்போது, பிரபல நடிகையான ரேகா நாயர், இரவின் நிழல் படத்தில் நடித்த ஒரு காட்சியை மிக இழிவாக பேசியதால் கோபமடைந்த நடிகை, வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பார்த்திபன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் இரவின் நிழல். இது நான் லீனியர் முறையில் படமாக்கப்பட்ட உலகின் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படமாகும். வெளியானது முதல் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் நல்ல வசூல் செய்து வருகிறது.
இப்படத்திற்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் கிடைத்தாலும், மறுபுறம் சில சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகைகளின் நிர்வாணக் காட்சி மிகுந்த பேச்சுப்பொருளாக மாறிவருகிறது. இதில் நடிகை பிரிகிடா மற்றும் ரேகா நாயர் ஆகியோர் ஒரு சீனில் மட்டும் நிர்வாணமாக நடித்துள்ளனர். இதற்கு சினிமா விமர்சகர்கள் மத்தியில் சில எதிர்ப்புகளும் கிளம்பின.
இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில், இரவின் நிழல் பற்றி பேசுகையில், பாசிடிவான விமர்சனங்களை சொன்னாலும், இப்படத்தில் அரை நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்திருந்த நடிகை ரேகா நாயரை இழிவுபடுத்தி பேசியதாக புகார் எழுந்தது.
இதனால் கடுப்பான ரேகா நாயர், நேற்று சென்னை திருவான்மியூர் கடற்கரையில் ஹாயாக வாக்கிங் சென்ற பயில்வான் ரங்கநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நான் நிர்வாணமா நடிச்சா உனக்கென்ன என ரேகா நாயர் கேட்க, பதிலுக்கு நீ ** நடிச்சா அப்படித்தான் பேசுவேன் என பயில்வான் கூறியதால் வாக்குவாதம் முற்றியது.
இதையடுத்து கோபமடைந்த ரேகா நாயர், பயில்வான் ரங்கநாதனை அடிக்க பாய்ந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் தடுத்து அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.