முதல்முறையாக விவாகரத்திற்கு பின் நாக சைத்தன்யா பற்றி பேசிய சமந்தா.. Koffee With Karan நிகழ்ச்சியில் ஓபன் டாக்

Samantha speaks about her divorce and naga chaitanya in koffee with karan

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

Samantha speaks about her divorce and naga chaitanya in koffee with karan

தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

Samantha speaks about her divorce and naga chaitanya in koffee with karan

2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன் இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பின்னர், திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ள சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் செம ஹிட் அடித்தது. மேலும், திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Samantha speaks about her divorce and naga chaitanya in koffee with karan

நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை நிராகரிக்கும் வகையில் நாக சைதன்யா விளக்கம் அளித்திருந்தார். அதாவது, சமந்தாவுக்கும், இவருக்கும் இன்னும் விவாகரத்து நடக்கவில்லை, வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Samantha speaks about her divorce and naga chaitanya in koffee with karan

இத்தனை நடந்தாலும், சமந்தா - நாக சைதன்யா அவர்களின் விவாகரத்து குறித்த காரணம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது ஒரு நிகழ்ச்சியில் சமந்தா தனது விவாகரத்துக்கான காரணம் குறித்து பேசியுள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது.

Samantha speaks about her divorce and naga chaitanya in koffee with karan

அதாவது, பாலிவுட் சின்னதிரையில் மிகவும் பேமஸ் ஆன நிகழ்ச்சி என்றால் காபி வித் கரண் ஜோகர். இவ்வளவு இந்தியில் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோவான காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் சமந்தா அண்மையில் கலந்துகொண்டார். அதில் ‘நான் ஏன் சைதன்யாவை பிரிந்தேன்’ என தனது விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது செம வைரலாக பேசப்பட்டது.

Samantha speaks about her divorce and naga chaitanya in koffee with karan

இந்நிகழ்ச்சியின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நடிகை சமந்தா, திருமண வாழ்க்கை சந்தோஷமில்லாமல் அமைவதற்கு நீங்கள் தான் காரணம் என அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், பிரபல பாலிவுட் இயக்குனருமான கரண் ஜோகரை பார்த்து கூறுகிறார். ஏனென்றால் நீங்கள் தான் K3G படத்தில் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என காட்டினீர்கள். ஆனால் உண்மையில் அது கே.ஜி.எஃப் படம் போன்று பல பிரச்சனைகள் நிறைந்தது என நகைச்சுவையாக கூறினார் சமந்தா.

Samantha speaks about her divorce and naga chaitanya in koffee with karan

காபி வித் கரண் ஷோவில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உடன் கலந்துகொண்ட சமந்தா, செட்டுக்குள் ஒன்றாக தான் நுழைகின்றனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சமந்தாவை அக்ஷய் தூக்கி வருகிறார். இது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது. மேலும், என்னென்ன சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்துள்ளது என்பது முழு எபிசோடும் வெளிவந்தால் தான் தெரியும் என எதிர்பார்த்திருந்த நிலையில், சமந்தா நடிகர் அக்‌ஷய் குமாருடன் சேர்ந்து புஷ்பா பட பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது வெளியாகி செம வைரலாகி வருகிறது.

Samantha speaks about her divorce and naga chaitanya in koffee with karan

இந்த ஷோவில் சமந்தாவிடம் முன்னாள் கணவர் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கேள்விக்கு சமந்தா, எங்கள் இருவரையும் ஒரே அறையில் அடைத்து வைக்க வேண்டும், அங்கு மிகவும் ஷார்ப்பான பொருள்கள் எதுவும் இருக்க கூடாது என பேசியுள்ளார். அவர் கூறிய இந்த பதில் ரசிகர்களை ஷாக் செய்துள்ளது.

Share this post