சந்தியா, அர்ச்சனா தொடர்ந்து, ராஜா ராணி 2 சீரியல் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. விரைவில் EndCard'ஆ ?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், ராஜா ராணி 2 தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 தொடர்ந்து, ராஜா ராணி சீசன் 2 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் ஒரு பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகள் குறித்த கதை ஆகும்.
சந்தியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா, 2வது பிரசவத்திற்காக சீரியல் இருந்து விடுபெற்றார். அதன் பின்னர், ஆலியா மானசாவிற்கு பதிலாக ரியா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகை அர்ச்சனா சீரியல் விட்டு சென்றார். அவருக்கு பதில், ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் நடித்த அர்ச்சனா குமார், அர்ச்சனாவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சீரியல் நாயகனாக நடித்து வரும் சித்துவும் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் இந்த சீரியலில் இருந்து விரைவில் அவரும் விலகுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வந்து விடும் என சொல்லப்படுகிறது.