சினிமாவில் இவ்ளோ வருஷம் இருந்தும் விஜய் உடன் நடிக்காத நடிகை.. தனுஷ் & அஜித் பட பிரபல தமிழ் நடிகை பேட்டி !
பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ்.
எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், தனது தந்தை இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி படமான இது நம் நீதி வரை என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன்படி யூத், பகவதி, புதிய கீதை, திருமலை,திருப்பாட்சி, சிவகாசி, போக்கிரி போன்ற வெற்றி படங்கள் விஜய்க்கு கைகொடுத்தது.
மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 திரைப்படம் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ் திரையுலகத்தில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஒருவர், சமீபத்திய பேட்டியில், இத்தனை வருடங்கள் ஆனாலும், இன்னும் தளபதி விஜய் உடன் நடிக்காதது குறித்து பேசியுள்ளார்.
நடிகை சரண்யா பொன்வண்ணன் ஒரு பேட்டியில் இதுவரைக்கும் நான் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்தது இல்லை ஆனால் எனக்கு விஜய் உடன் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
முன்னணி நடிகர்களான அஜித், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இதுவரைக்கும் நான் விஜயுடன் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
பின்வரும் காலங்களில் நான் விஜய் உடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை சரண்யா பொன்வண்ணன் கூறிய தகவல் விஜயின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.