கதிர் மீது காதலா? பிக்பாஸுக்கு பின் வெளிப்படையாக சொன்ன குயின்ஸி.. Viral Video
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகை ஆயிஷா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் தற்போது விளையாடி வருகின்றனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர். மாடல் குயின்சி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத பல போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டர்கள். அதில் ஒருவர் குயின்சி. கோயம்புத்தூரை சேர்ந்த இவர், மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, ஆல்பம் சாங்ஸ், கவர் சாங்ஸ் போன்றவை மூலம் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி வந்தார். மேலும், சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் அன்பே வா தொடரிலும் குயின்சி நடித்திருக்கிறார்.
இவரது வசீகர தோற்றதால் இவருக்கு ரசிகர்கள் கூடினார்கள். ஆனால், இவர் பிக்பாஸ் வீட்டில் விளையாடிய விதத்தை பார்த்து இவரை மிச்சர் லிஸ்டில் சேர்த்துவிட்டனர் ரசிகர்கள். இவரை Troll செய்து பல விதமான மீம்கள் ட்விட்டரில் போட்டு கலாய்த்து வந்தனர். அதோடு பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டரும் இவரும் அப்பா மகளை போல பழகி வந்தனர். கடந்த வாரம் குயின்சி குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குயின்சி, ராபர்ட் மாஸ்டரை சந்தித்தார். ராபர்ட் மாஸ்டரும் குயின்சிக்கு கேக் வெட்டி சர்ப்ரைஸ் கொடுத்தார். இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியின் மூலம் நேரலையில் பேசிய குயின்ஸி தற்போது வீட்டில் இருக்கும் அசீம், விக்ரமன், ஷிவின் இவர்கள் மூவரும் கண்டிப்பாக நிகழ்ச்சியின் இறுதிவரை செல்வார்கள் என்று கூறினார். மேலும் அசீம் நல்லவர்தான் அவர் கோவப்படுவதை குறைத்து கொண்டால் கண்டிப்பாக நல்ல பேர் அவருக்கு கிடைக்கும் என்று கூறினார்.
மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது கதிருக்கும் குயின்சிக்கும் காதல் இருப்பது போல பலரும் நினைத்தார்கள். அதிலும் குறிப்பாக சிவின், கதிர் மீது தனக்கு இருக்கும் காதலை மறைமுகமாக சொன்னபோது அதை புரியாது போல கதிர் மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து கதிர் மற்றும் குயின்ஸி ஆகிய இருவரும் நெருக்கமாக இருப்பது போல சிவனை வெறுப்பேற்றினார்கள். இதனால் குயின்சி மற்றும் கதிர் காதலிப்பதாக சமூக வலைதளத்தில் பேசப்பட்ட நிலையில் சிவினை வெறுப்பேத்த அப்படி நாங்கள் இருவரும் Prank செய்தோம் என்று கூறியிருக்கிறார்.