சாம்பார் வைக்கிறேன், பாத்ரூம் கழுவுகிறேன் ரிப்பீட்டு.. புலம்பித் தள்ளும் பிக் பாஸ் போட்டியாளர்..!

poornima-says-bigg-boss-is-boring

பிக்பாஸ் சீசன் 7ல் தனது நடத்தையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார் பிரதீப் ஆண்டனி. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 8 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பற்ற போட்டியாளர், பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்று கூறி பிரதீப் ஆண்டனியின் வாதத்தை கூட கேட்காமல் கமல்ஹாசன் ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார்.

முன்னதாக பிக் பாஸ் கேம் ஷோ என்றாலே சர்ச்சைக்கு பெயர் போனது என்று சொல்லலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

poornima-says-bigg-boss-is-boring

இந்நிலையில், தொடர்ந்து விதி மீறல்களில் பூர்ணிமா மற்றும் மாயா ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் அவ்வப்போது, தனியாக போய் பேசுவது மைக்கை ஆப் செய்து ஓரமாக வைத்துவிட்டு கிசுகிசு பேசுவது மற்ற போட்டியாளர்களை பற்றி பேசுவது என பல விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை போட்டியாளரை மட்டுமே திட்டி தீர்த்த பூர்ணிமா தற்போது பிக் பாஸை கூட விட்டுவைக்கவில்லை. ஆம், பிக் பாஸ் 7 நிகழ்ச்சி மிகவும் போர் அடிக்கிறது என கூறியுள்ளார். காலையில் எழுந்திருக்கிறேன், சாம்பார் வைக்கிறேன், பாத்ரூம் கழுவுகிறேன் ரிப்பீட்டு.. என பேசியுள்ளார் பூர்ணிமா. இவர் பேசிய வீடியோ ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Share this post