'சினிமால உச்சிக்கு போய்டா இப்டி செய்ய தோணுமோ..' அஞ்சலி பற்றி வருத்தத்துடன் பேசிய பாண்டி.. வைரல் வீடியோ !
இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக 2007ம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
அதன் பின்னர், இவர் நடித்த ‘அங்காடி தெரு’ படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து, நடிகை அஞ்சலிக்கு அடுத்தடுத்து நல்ல வரவேற்பு கிடைக்கவே, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.
தமிழில், சுமார் 20 திரைப்படங்கள் வரை நடித்த அஞ்சலி திடீரென நடிப்பை ஓரம் கட்டிவிட்டு ஐதராபாத்’ல் செட்டில் ஆனார். சிறிய இடைவெளிக்கு பின்னர் சிங்கம் 2 படத்தில் ஒரு பாட்டிற்கு மட்டும் குத்தாட்டம் போட்டார்.
பின்னர், நடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கிய அஞ்சலி, நாடோடிகள் 2 படத்தில் நடித்தார்.
தமிழ் திரையுலகில் வெப்சீரிஸ்களும் அதிக அளவில் வெளிவர தொடங்கிய நிலையில், ‘பாவக்கதைகள்’ ‘நிசப்தம்’, ‘நவரசா’ உள்ளிட்ட சீரிஸ்களில் நடித்து வந்த நிலையில், அடுத்தடுத்து படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில், போட்டோக்கள், வீடியோக்கள் என அப்லோட் செய்து வருகிறார்.
தற்போது, கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பாண்டி. இவர் அங்காடி தெரு திரைப்படத்தில் அஞ்சலி உடன் நடித்திருந்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், அஞ்சலி நடந்து கொள்ளும் விதம் குறித்து அவர் பேசிய வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.
அஞ்சலியைப் பற்றி பாண்டி அளித்துள்ள பேட்டியில், அஞ்சலியும், தானும் அங்காடித் தெருவுக்கு முன்பே நண்பர்கள். ஆனால் சமீப காலமாக நான் போன் செய்தால் எடுப்பதில்லை. ஒரு நாள் மலேசியா செல்லும் போது அஞ்சலியை சந்தித்தேன்.
அப்போது போன் செய்தால் மேனஜரிடம் பேசி தான் உங்கிட்ட பேசணுமா என திட்டினேன், பிறகு அஞ்சலி தன்னுடைய பர்சனல் நம்பரை கொடுத்தார்.
பிறகு அந்த நம்பருக்கு 4 முறை அழைத்தும் எடுக்கவில்லை என்றும், சினிமாவில் உச்சிக்கு போய்விட்டால் இந்த மாதிரி செய்ய தோன்றுமோ என தெரியவில்லை என்று வருத்தத்துடன் கூறினார்.
Yendi Phone Panna Asst Kitta Kudupaya ?#BlackPandi About #Anjali pic.twitter.com/CC8J0zQP0Q
— chettyrajubhai (@chettyrajubhai) December 24, 2021