இனி 'இந்த' மாதிரி சீன்ஸ் எல்லாம் "NO".. திருமணம் முடிந்ததும் நயன் போட்ட கண்டிஷன்..!

Nayanthara says no to kissing and intimate scenes in films after marriage

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடித்திருந்தார்.

Nayanthara says no to kissing and intimate scenes in films after marriage

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார்.

கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

Nayanthara says no to kissing and intimate scenes in films after marriage

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார்.

இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.

Nayanthara says no to kissing and intimate scenes in films after marriage

கடந்தாண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதனை ஒரு பேட்டியில் நயன்தாரா கூறியிருந்தார்.

Nayanthara says no to kissing and intimate scenes in films after marriage

இந்நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் இன்று ஜுன் 9ம் தேதி முகூர்த்தத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது. முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

Nayanthara says no to kissing and intimate scenes in films after marriage

மகாபலிபுரத்தில் நடக்கும் திருமணத்திற்கு மிக குறைவானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. திரையுலக பிரபலங்களை அழைத்து சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Nayanthara says no to kissing and intimate scenes in films after marriage

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கி உள்ளது.

Nayanthara says no to kissing and intimate scenes in films after marriage

இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா பொருத்தம் சூப்பர் என ரசிகர்கள் புகைப்படங்களை பகிர்ந்து கமெண்ட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். திருமணம் முடிந்த கையோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

Nayanthara says no to kissing and intimate scenes in films after marriage

திருப்பதியில் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்ற விக்கி - நயன்தாரா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் செம ட்ரெண்ட் ஆனது.

Nayanthara says no to kissing and intimate scenes in films after marriage

இந்நிலையில், திருமணத்திற்கு முன்னதான பிரஸ் மீட்டில் அறிவித்தது போலயே, தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா பிரஸ் மீட்க்கு வந்து செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது எதிர்காலத்திற்கு அனைவரது ஆசிர்வாதமும் தேவை என கூறி நன்றி கூறினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

Nayanthara says no to kissing and intimate scenes in films after marriage

புதுமணத் தம்பதியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜூன் 12 நண்பகல் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினர். கேரளாவின் திருவல்லாவில் வசிக்கும் நயன்தாராவின் தாயார் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆசி பெற நட்சத்திர ஜோடி வந்துள்ளனர் என்றும், சில நெருங்கிய உறவினர்கள் வீட்டிற்கு செல்லலாம் என சொல்லப்படுகிறது.

Nayanthara says no to kissing and intimate scenes in films after marriage

Nayanthara says no to kissing and intimate scenes in films after marriage

இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா புது கண்டிஷன் போட்டுள்ளததாக தகவல் வெளிவாகியுள்ளது. அதாவது, படங்களில் இனி ஹீரோக்களுடன் முத்த காட்சிகள், படுக்கை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என தயாரிப்பாளர்கள் மாற்றம் இயக்குனர்களிடம் கூறியுள்ளாராம். ஒரு சில நடிகைகள் திருமணம் முடிந்த கையோடு நடிப்பதையே அடியோடு நிறுத்துவதையும், சிலர் இது போல நிபந்தனைகள் கூறுவது வழக்கம். தற்போது, நயன்தாராவும் அதை செய்துள்ளார். நயன்தாராவின் இந்த முடிவு, சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Share this post