'மாறன்' இயக்குனர் கார்த்திக் நரேன் பதிவிட்ட சர்ச்சைக்குள்ளான பதிவு !
துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் அவர்களின் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் மாறன். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம், தனுஷ், மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் குறித்து சமூக வலைத்தளத்தில் பல விவாதங்கள் நடந்துவந்த நிலையில் படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஸ்டேட்டஸ் பெரும் பேசுப்பொருளாகியுள்ளது.
அதில், “ரைட்டு.. உண்மைய அப்புறம் சொல்றேன்” என குறிப்பிட்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை கிளப்பியுள்ளது. இப்பதிவிற்கு மாறன் படத்தின் கதையில் நடிகர் தனுஷின் தலையீடு இருந்ததால், படத்தின் விமரசனங்கள் இப்டி மாறியுள்ளது என்பதை தான் இப்படி வெளிப்படுத்தியுள்ளார் என பலர் பதிவிட்டு வருகின்றனர்.
இப்படி பேசுபொருளாக மாறியுள்ள அந்த பதிவை இயக்குனர் கார்த்திக் நரேன் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியுள்ளார். அந்த உண்மையை சொல்லுங்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.