தமிழில் லெஸ்பியன் க்ரைம் த்ரில்லர்.. ராம் கோபால் வர்மாவின் படைப்பு.. கிளம்பும் எதிர்ப்புகள் !
அரசியல், சினிமா போன்றவற்றை பத்தி சர்ச்சை விமர்சனங்களை அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவது ராம் கோபால் வர்மா வழக்கம். மேலும், சில திரைப்படங்களிலும் controversy திரைக்கதைகளால் பெயர் பெற்றவர். தற்போது லெஸ்பியன் கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் புது பிரச்னையை கிளப்பியுள்ளது.
ஏப்ரல் 8ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தியாவின் முதல் லெஸ்பியன் திரைப்படம் என விளம்பரப்படுத்தியுள்ள ராம் கோபால் வர்மா, இப்படத்தில் நைனா கங்குலி மற்றும் அப்சரா உள்ளிட்டோரை நடிக்க வைத்துள்ளார்.
இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நடிகைகள் பேசினர். லெஸ்பியன் உறவை குறித்து சமூக ரீதியான பார்வை குறித்து எடுத்துரைத்துள்ளதாக இப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கம் போல, சிலர் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.