ஸ்க்ரீனை பாதுகாக்க முள்வேலி அமைத்த தியேட்டர் ஓனர்.. RRR ரிலீசுக்கு முன்னேற்பாடு !

Fence has been arranged in theatres for rrr release

இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘RRR’. வரும் மார்ச் 25ல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது.

பொதுவாக ஒரு முன்னணி நடிகரின் திரைப்படம் என்றாலே திரையரங்கில் கூட்டம் ஆரவாரம் எகிறும். இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியா பட் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். எனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையடுத்து திரையரங்கில் ரசிகர்கள் பட்டாளம் கட்டுக்கடங்காத வகையில் வரும் என்பதால், திரையரங்கில் திரையைப் பாதுகாக்க கம்பிவேலி அமைத்துள்ளார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் சூர்யா என்பவர்.

Fence has been arranged in theatres for rrr release

ஏற்கெனவே அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தில் ரசிகர்களின் கொண்டாட்டத்தால், அதிலும் ஓ சொல்ரியா ஊ ஊ சொல்ரியா பாடலுக்கு திரை முன்பு ஆட்டம் போட்டு திரையரங்கின் திரை சேதமடைந்தது, அதனால், தற்போது வெளியாக உள்ள RRR படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் போன்ற இரண்டு உச்ச நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளதால் பாதுகாப்புக்கருதி இவ்வாறு கம்பிவேலி அமைத்துள்ளதாக கூறியுள்ளார்.

Share this post