தலைவர்169 பட நடிகர்-நடிகைகளுக்கு ரஜினி போட்ட அதிரடி கண்டிஷன் !
அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘தலைவர்169’. சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
தொடர் வெற்றி படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் தலைவர்169 இவர் இயக்கமாட்டார் என தகவல் பரவி வந்த நிலையில், ரஜினி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர்169 பட போஸ்டரை பதிவிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய், முக்கியமான ரோலில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க போவதாகவும் கூறப்பட்டது. தலைவர் 169 படம் இந்த ஆண்டு தீபாளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷுட்டிங்கே ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தான் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட் தகவலாக, தலைவர்169 படத்தில் ரஜினிக்கு வில்லனாக கன்னட மெகா ஸ்டார் சிவ ராஜ்குமார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பதாக அப்டேட்கள் வெளியானது.
இதுவரை பாலிவுட், டோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகர்களை தமிழ் படங்களில் வில்லனாக நடிக்க வைத்து வந்தனர். கேஜிஎஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, கன்னட திரையுலகின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது என சொல்லப்படுகிறது.
படத்தின் டைட்டில் மற்றும் கதைக்களம் குறித்து தகவல் வெளியானது. அதன்படி, தலைவர்169 படம் சிறை மற்றும் சிறைக்கைதிகள் சம்பந்தப்பட்ட கதை எனவும், இப்படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இப்படம் குறித்த மேலும் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
ரஜினியின் தீவிர ரசிகனான சிவகார்த்திகேயன் தற்போது ரஜினி படத்தில் அவரின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் பிரபல சேனலுக்கு பேட்டியளித்த ரெடின்கிங்ஸ்லே, ‘தலைவர் 169’ படத்தில் நீங்கள் நடிக்கின்றீர்களா? என்ற கேள்விக்கு ’நெல்சன் இப்போதுதான் திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார், முதல் பாதி தான் எழுதி முடித்திருக்கிறார்.
வெறித்தனமாக அவர் அந்த பணியில் ஈடுபட்டு வருவதால் அதன் பின்னர் தான் எந்தெந்த கேரக்டரில் யார் யார் நடிப்பார்கள் என்பதை அவர் முடிவு செய்வார். இது முழுக்க முழுக்க நெல்சன் திலீப்குமார் திரைப்படம் என கூறியிருந்தார்.
இம்மாத இறுதிக்குள் கதை தயாராகிவிடும் என்றும், ஜூலை மாதம் இறுதியில் தலைவர்169 படத்தின் படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளது எனவும் கூறப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி ரஜினி தலைவர்169 படத்தை விரைவில் முடித்து வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.
அதனால், இப்படத்தில் நடிக்கும், நடிகர்களிடம் மூன்று மாதங்களுக்கு கால்ஷீட் வாங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளாராம். மேலும், தலைவர்169 படத்தில் நடிக்க கமிட்டானவர்கள் வேறு எந்த படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும், கூப்பிடும் போது கட்டாயம் வந்து தலைவர்169 நடிக்கவேண்டும் என்ற ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளதாம்.