அந்த மியூசிக் டைரக்டர் என்னை தப்பான எண்ணத்தில் தொட்டார்.. கோலிவுட்டில் அதிர்ச்சி ஏற்படுத்திய கல்யாணி..
குழந்தை நட்சத்திரம் என்றாலே ஞாபகம் வருபவர் கல்யாணி, இவரது இயற்பெயர் பூர்ணிதா. 300ற்கும் அதிமான விளம்பர படங்களில் நடித்த இவர், அள்ளி தந்த வானம் என்னும் பிரபுதேவாவின் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிக பேமஸ். இதில் காசு காசு என வரும் பாடல் எவராலும் மறக்க முடியாது.
அதனைத் தொடர்ந்து, ரமணா மற்றும் ஜெயம் படத்தில் முக்கிய வேடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்த கல்யாணி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து, சின்னத்திரைக்கு வந்த கல்யாணி, சாருலதா, அண்ணாமலை, சின்ன பாப்பா பெரிய பாப்பா, பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், ஆண்டாள் அழகர், கங்கா போன்ற தொடர்களில் முக்கிய ரோல் வகித்தார். மேலும், சில பிரபல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றினார். பின்னர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் அதிகம் பேட்டி அளித்து வரும் கல்யாணி, ஆன்லைன் வீடியோ கால் உரையாடலில் சக தொகுப்பாளர் பேசிய சில விஷயத்தை பற்றி பேசியிருந்தார். தற்போது, சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். தற்போது அந்த பேட்டி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருக்கும் ஒருவர், எங்கள் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பராக இருந்தார். அவர் ஒரு பேமிலி மேன். அப்போது எனக்கு எட்டு வயது இருக்கும். அவர் நான் தூங்கும் போது தப்பான நோக்கத்தில் தொடுவார். அந்த உணர்வு ஏற்படும். அப்போது நான் தூக்கத்தில் இருந்து முழித்து விடுவேன். இருந்தாலும் பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு படுத்துக்கொண்டிருப்பேன்.
இந்த விஷயத்தை நான் எங்கேயும் சொன்னதில்லை. என்னுடைய அம்மாவிடம் கூட நான் சொன்னதில்லை. என் அம்மா நம்பாமல் என்னை திட்டுவார் என பயத்தில் சொல்லியதே இல்லை. முதல் முறையாக என் கணவரிடம் இதை சொன்னேன். அவரும் என் சூழ்நிலையை புரிந்துகொண்டு என்னை சமாதானம் செய்தார். இப்போது நினைத்தாலும் கூட எனக்கு அருவருப்பாக இருக்கிறது” என கூறியுள்ளார்.
ஆனால் இறுதிவரை யார் அந்த பிரபல இசையமைப்பாளர் யார் என்பதை அவர் கூறவில்லை. இதனால் அவர் யாராக இருக்கும் என்ற யூகங்கள் தற்போது கோலிவுட்டில் நிலவி வருகிறது. மேலும் இந்த விஷயம் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.