வெளியான Gujarat Titans லோகோ.. இந்த IPL முதல் களமிறங்க போகும் ப்ரெஷ் டீம்..!
2021 முதல் தொடங்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி வருகிற ஐபிஎல் தொடர் முதல் விளையாட போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் உரிமத்தை CVC Capital Partners வாங்கியுள்ளனர். ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடவிருக்கும் இந்த அணிக்கு ஆஷிஷ் நெஹ்ரா கோச் ஆவர்.
வெர்ச்சுவல் நிகழ்வாக மெட்டாவெர்ஸ் மூலம் நடைபெற்ற நிகழ்வில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ஷூப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த லோகோ திரிகோண வடிவில் பட்டத்தை இன்ஸ்பிரேஷனாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அந்த மாநிலத்தில் கலாசாரத்தை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.
Share this post