தமிழகத்தில் 5 வார்டுகளில் நாளை மறுவாக்குப்பதிவு: காரணம் இதுதான்...தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் 5 வார்டுகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் வார்டு எண் 51, 179 வது வார்டில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும்.
சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் வார்டு எண் 179 வாக்குச்சாவடி எண் 5059ல் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும். அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சி 16ம் வார்டு வாக்குச்சாவடிகள் 16 எம்,15 டபிஎல்யூ இல் மறுவாக்குப்பதிவு நடைபெறும்.
மதுரை திருமங்கலம் நகராட்சி 17வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 17ல் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும். திருவண்ணாமலை நகராட்சி 25ம் வார்டு வாக்குச்சாவடிகள் 57 எம், 57 டபிஎல்யூ இல் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.