பிளாட்பார்மில் நடிகர் விஜயின் தந்தை ! S A C வெளியிட்ட வீடியோ ! இணையத்தில் வைரலாகும் போட்டோஸ் !
பிரபல இயக்குனர் மற்றும் முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்களின் தந்தை S A சந்திரசேகர் ஆவார்.
பிரபல திரைப்படங்களை இயக்கி வந்த இவர், தற்போது தனது சொந்த யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ என்று சேனல் பெயரை வைத்துள்ளார்.
இந்த சேனலில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பற்றி பேசவுள்ளதாக அந்த சேனலில் புரோமோ ஒன்றை ரிலீஸ் செய்திருந்தார்.
இந்த நிலையில், தன் வாழ்க்கை வரலாற்றின் முதல் எபிசோடை’பிளாட்பார்மில் எஸ்ஏசி’ என்ற தலைப்பில் தற்போது ரிலீஸ் செய்துள்ளார். சென்னை தி.நகருக்கு காரில் வந்திறங்கி பாய் மற்றும் தலையணையை எடுத்துக் கொண்டு வந்து பிளாட்ஃபார்மில் அமரும் எஸ்.ஏ.சி. தன்னுடைய வாழ்க்கை பயணம் குறித்து பேச தொடங்குகிறார்.
இந்த இடம் தான், தன்னுடைய சென்னை வாழ்க்கையை தொடங்கியதாக தெரிவித்துள்ளார். நாயுடு ஹால் முன்பு சுமார் 47 நாட்கள் இருந்ததாகவும், வீதிகளிலேயே படுத்துறங்கியதாகவும் கூறியுள்ளார்.
மழை வரும் நேரத்தில், அருகில் நிறுத்தப்பட்ட சைக்கிள் ரிக்ஷாக்களுக்குள் அமர்ந்து கொண்டிருந்ததாக தெரிவித்துள்ள எஸ்.ஏ.சி எந்த காலதுக்குமே பழைய நினைவுகளை மறந்து விட கூடாது எனக் கூறியுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இனிவரும் எபிசோடுகளில் இதைவிட பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.