தியேட்டர் முன் பட்டாசு வெடிக்காதீங்க... இளைஞர்களிடம் அறிவுறுத்திய காவலர்: கையை கடித்து வைத்த அஜித் ரசிகர்கள் கைது..!!
திருச்சி: நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்பட வெளியீட்டின்போது பட்டாசு வெடித்ததை கண்டித்த போலீசாரின் கையை கடித்து வைத்த ரசிகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர். ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான இவரது வலிமை திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை கிடைத்துள்ளது.
படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருந்தாலும் இரண்டாம் பாதி சென்டிமென்டாக மட்டுமே இருப்பதாகவும் பேசப்படுகிறது. இருந்தாலும் படம் வேற லெவல் ஹிட் என அஜித் ரசிகர்கள் பதில் அளித்து வரும் நிலையில் இரண்டாம் நாளில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை என சில தியேட்டர்களில் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் திருச்சியில் அஜித் ரசிகர்கள் இருவரை காவல்துறையினர் கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னணி விசாரித்தபோதுதான் சிரிப்பை ஏற்படுத்தும் தகவல் ஒன்றும் வெளியானது.
திருச்சி அருகே வலிமை படத்தின்போது வெடி வெடித்ததை தடுத்த போலீஸாரை கடித்த அஜித் ரசிகர்கள் இருவர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். திரைப்பட நடிகர் அஜித் நடித்த திரைப்படம் லால்குடியில் உள்ள அன்பு சினிமா தியேட்டரில் நேற்று வெளியானது .
அப்போது, அங்கிருந்த போலீசார் வெடி வெடித்த இளைஞர்களை இளைஞர்களை கண்டித்துள்ளனர். அப்போது அந்த இரு இளைஞர்களும் காவலர் சுரேஷ் என்பவரின் வலது கையினை கடித்து காயப்படுத்தினார். இதனால் காயம் அடைந்த போலீசார் சுரேஷ் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் .
போலீசார் சுரேஷை கடித்த அஜித் ரசிகர் டால்மியாபுரத்தைச் சேர்ந்த அருண் குமார் மற்றும் கோபிநாத் ஆகிய இருவரையும் லால்குடி போலீசார் கைது செய்து லால்குடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவின் கீழ் முசிறி கிளைச் சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.