Viral Video : சாப்பிட்டு கீழே போட்ட எச்சில் எலும்பை கழுவி மீண்டும் சுட சுட சூப்.. சென்னையில் அரங்கேறிய சம்பவம்
சென்னையை அடுத்த காரப்பாக்கத்தில் சூப் கடைக்காரர் ஒருவர் வாடிக்கையாளர் சாப்பிட்டு கீழே போட்ட எலும்புகளை மீண்டும் சூப் போட பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த பழைய ஓஎம்ஆர் காரப்பாக்கம் நடை மேம்பாலம் பகுதியில் கடந்த 10 வருடங்களாக சாலையோரத்தில் மாலை 5 மணி முதல் இரவு வரை தள்ளுவண்டியில் ஆட்டு கால் சூப் கடை நடத்தி வருகிறார் ஒரு முதியவர்.
இங்கு சூப் குடிக்கும் வாடிக்கையாளர்கள் சூப் குடித்துவிட்டு எலும்பு துண்டுகளை கீழே போட்டு விட்டு செல்கின்றனர்.
பின்னர், சிறிது நேரம் கழித்து வாடிக்கையாளர்கள் கீழே போட்ட எலும்பு தூண்டுகளை ஆள் இல்லாத நேரம் பார்த்து, சூப் கடைக்காரர் எடுத்துவிட்டு தண்ணீர் கழுவி மீண்டும் சூப் பாத்திரத்தில் போட்டு விற்பனை செய்கிறார். இக்காட்சிகள் அருகில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பான வீடியோக்கள், தற்போது சென்னைவாசிகள் மத்தியில் அதிக வைரலாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.