திடீரென கழன்று ஓடிய ஸ்கூல் பஸ்'ன் டயர்.. வெளியான சிசிடிவி வீடியோ காட்சி

Dharapuram bus tyre removed automatically from school bus

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் வகுப்பு முடிந்தவுடன் மாணவர்கள் பள்ளி பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்தின் பின் பக்க டயர் தனியாக கழன்று ஒடியுள்ளது. இதை பார்த்த டிரைவர் உடனே பிரேக் போட்டு பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் திடீரென பிரேக் போட்டதால் பேருந்தில் இருந்த 15 மாணவ மாணவிகள் காயமடைந்தனர். இதனால் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் டயர் கழன்று ஓடும் பரபரப்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Share this post