5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரரை தோற்கடித்த 16 வயது சென்னை சிறுவன்..!
சர்வதேச செஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ்போட்டிகள் ஆன்லைன் முறையில் நடைபெற்று வரும் நிலயில், இந்தியா சார்பில் கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த 16 வயது பிரக்யானந்தா பங்கேற்றுள்ளார்.
ஏர்திங்ஸ் தொடரில் ஆர்மேனிய வீரர் லெவோன் ஆரோனியனுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிரக்யானந்தா, 2 போட்டிகளை டிரா செய்தார். மற்ற போட்டிகள் தோல்வியில் முடிந்தன.
ஆட்டத்தின் 39வது நகர்வின்போது, 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீரரான மேக்னஸ் கார்ல்சன் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவர் தோற்கடித்திருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் 16 சர்வதேச வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெறும் ஒவ்வொரு வீரருக்கும் 3 புள்ளிகளும், டிரா செய்பவருக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படும். முதல் சுற்று முடிவதற்கு இன்னும் 7 ஆட்டங்கள் உள்ளது.