அடுத்த 3 நாட்கள் நோ டாஸ்மாக்.. ஸ்டாக் வைக்க கடைகளுக்கு படையெடுத்து வரும் மதுபிரியர்கள்..

Crowd in tasmac shops due to tasmac leave for next 3 days

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் நாளை (17ந் தேதி) முதல் 19ந் தேதி வரை 3 நாட்கள் தேர்தல் நடைபெறும் நகர்ப்புற பகுதிகளில் மட்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறாத பிற பகுதிகளில் மதுக்கடைகள் செயல்படும் என கூறப்பட்ட நிலையில், அவற்றையும் மூட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால் மதுபிரியர்களுக்கு பெரும் திண்டாட்டம் தான். இதனால் மது விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடைகள் மூடப்படும் தங்கள் பரவ சரக்குகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள முடிவு செய்து கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர் மதுபிரியர்கள்.

கடைகள் மூடப்படுவதை தொடர்ந்து போதுமான அளவு சரக்குகளை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இருப்பு வைக்க அறிவுறுத்தி உள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு கடை திறப்பதற்கு முன்னதாகவே மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் மொத்தமாக மதுபானங்களை பெட்டி பெட்டியாக வாங்கி சென்றனர்.

அனைத்து வகையான மதுபானங்களையும் வாங்கி குவித்து வருகிறார்கள். சென்னையில் உள்ள கடைகளில் கூட்டம் இன்று அலைமோத மாலையில் இருந்து கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு சில கடைகளில் போலீசாரும் குவிக்கப்படுகிறார்கள். கடை ஊழியர்களால் மதுபானங்களை சப்ளை செய்ய முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது.

தினமும் சராசரியாக ரூ.80 கோடிக்கு மது விற்பனையாவது வழக்கம். 3 நாட்கள் கடைகள் மூடப்படுவதால் இன்று ஒரே நாளில் ரூ.200 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post