டெல்லி அணி கிரிக்கெட் வீரருக்கு கொரோனா ! அப்போ மேட்ச்..?
ஐபில் கிரிக்கெட் போட்டி தற்போது மிகுந்த வரவேற்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பாட்ரிக்கு இரு நாட்கள் முன்பு கொரோனா உறுதியானது. நாளை மறுநாள் டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதும் நிலையில், இப்படி தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால், லீக் போட்டி நடைபெறுவது சந்தேகம் என கூறப்படுகிறது. இதனால், டெல்லி அணி வீரர்களின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
Share this post