நடிகர் விஜய்க்கு மூதாட்டி எழுதிய கடிதம்.. 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அனுப்பப்படாத கடிதத்தின் பின்னணி !

Old lady tried to send letter to vijay for seeking help

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகை விஜய். இவரது திரைப்படம் அல்ல, ஒரு சின்ன போட்டோ அல்லது படத்தின் அப்டேட் வெளியானாலே செம கொண்டாட்டமாக மாறிவிடுவது வழக்கம். அப்படி இவரது திரைப்படம் மாஸ்டருக்கு பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது.

பூஜா ஹெக்டே, செல்வராகவன் என பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம், வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று (22.03.2022) வெளியிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, பீஸ்ட் படத்தில் இருந்து ‘அரபிக்குத்து’ மற்றும் ‘ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய பாடல்கள் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டடித்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஜயிடம் உதவி கேட்டு மூதாட்டி ஒருவர் எழுதியுள்ள கடிதம் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நாமக்கல் , மோகனூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், வறுமையில் இருக்கும் தனக்கு உதவி செய்ய வேண்டி, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன், விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஆனால், விஜய்யின் முகவரி தெரியாத காரணத்தினால், அந்த கடிதத்தை அனுப்ப முடியாமல் போனது பற்றி, வேதனையுடன் தன்னுடைய பேரனிடம் அந்த பாட்டி தெரிவித்துள்ளார். தற்போது, மூன்று ஆண்டுகளுக்கு முன், அந்த பாட்டி எழுதிய கடிதம், அவரின் புகைப்படத்துடன் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த கடிதம் விஜய் கவனத்தில் போகுமா என்பதை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Share this post