Serialலில் இருந்து விலகுவதாக அறிவித்த பரீனா.. வைரலாகும் ரசிகர்களுக்கு நன்றி கூறிய அதிரடி போஸ்ட் !
ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த அஞ்சறை பெட்டி என்னும் சமையல் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை பரீனா அசாத். இதனைத் தொடர்ந்து, ஒரு நிமிடம் ப்ளீஸ், ஷோரீல், கிச்சன் கலாட்டா, கோலிவுட் கட், சினிமா ஸ்பெஷல் போன்ற நிகழ்ச்சிகளில் விஜேவாக பணியாற்றி வந்தார்.
அதனைத் தொடர்ந்து, அழகு, தாரி, மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது, பாரதி கண்ணம்மா சீரியல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் வில்லியாக தனது எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி வருகிறார்.
இதுமட்டுமின்றி, அபி டைலர் என்னும் சன் தொலைக்காட்சி தொடரில் பவானியாக நடித்து வந்தார்.
மேலும், இவர் கர்பமாக இருக்கும் சமயத்திலேயே வில்லி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்ததை சமூக வலைத்தளங்களில் மோசமாக கமெண்ட் செய்ததை எதிர்த்து தனது கருத்தை தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், தற்போது, அபி டைலர் சீரியலில் சில பல காரணங்களால் பவானியாக தொடரப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.