ஞாயிற்றுக்கிழமை ஸ்கூலுக்கு வரணும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

March 20 sunday will be working day for teachers for parent teacher meeting

கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் தீவிரமாக இருந்து வந்த நிலையில் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.

தற்போது பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி மார்ச் 19ம் தேதி சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது.

March 20 sunday will be working day for teachers for parent teacher meeting

மேலும் மார்ச் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாய அறிவிப்பினை பள்ளிக்கல்வி ஆணையர் கூறியுள்ளார். அதாவது, மார்ச் 20ம் தேதி அன்று மேலாண்மை குழு கூட்டம் மற்றும் பெற்றோர் கூட்டம் நடைபெறும். எனவே அதற்காக அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Share this post