12-14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை மறுநாள் முதல் தொடக்கம் !

Corona vaccine has been initiated for children between 12 yrs to 14 yrs

கொரோனா பரவல் குறைந்த போதிலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறையாது நடந்து வருகிறது. இந்நிலையில் 18 வயதிற்கும் மேற்பட்டோருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் நடுவே, 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என கூறப்பட்டிருந்தது.

கடந்த ஜனவரி 3ம் தேதி 15-18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஒவ்வொரு பள்ளியிலும் 15-18 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட் னிக்-வி ஆகிய மூன்று வகை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், 15-18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை மட்டுமே செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் நாளை மறுநாள் முதல் 12-14 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this post