ஓடும் பேருந்தில் கழன்று ஓடிய டயர்: 47 பயணிகள் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்...பல்லடத்தில் பரபரப்பு..!!

Bus tyre automatically removed from bus while running in coimbatore

திருப்பூர்: பல்லடம் அருகே அரசுப் பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் - பல்லடம் சாலை கள்ளகிணறு அருகே சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின், முன் சக்கரம் திடீரென கழன்று ஓடியது. இதையறிந்த ஓட்டுநர், உடனடியாக ஹேண்ட்பிரேக்கை போட்டு நடுவழியிலேயே பேருந்தை நிறுத்தியதால், பேருந்தில் இருந்த 47 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

நடுவழியில் சிக்கித் தவித்த பயணிகள், வேறு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும், சாலையில் நின்ற பேருந்தை கிரேன் மூலம் நகர்த்தி சாலையோரம் நிறுத்தினர். ஓடும் பேருந்தின் டயர் கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this post