தற்போதைய ஹாட் நியூஸ் : அன்னபூரணி அம்மாவின் Energy Dharshan.. !
ஆதிபராசக்தியின் மறு உருவம் என தோன்றி சமூக வலைதளங்களில் சென்சேஷனல் ஆக மாறி நடுவில் ஆளே காணாமல் போனவர் தான் இந்த அன்னபூரணி. என்னை நாடி வரும் குழந்தைகளுக்கு (பக்தர்களுக்கு) அருள் புரிவேன் என அன்னபூரணி சொன்ன வீடியோ பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்தது.
இவரது அருள் வீடியோ வெளியாகி செம வைரலன நிலையில், நமது நெட்டிசன்ஸ், மீம் க்ரியேட்டர்ஸ் எல்லாம் செம கலாய்த்து வந்தனர். அப்போது தான், இது எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று சந்தேகித்து, நமது நெட்டிசன்கள், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்த இவரை கண்டுபிடித்து, அந்த எபிசோடை செம வைரல் செய்தனர்.
அதில் சில ஆண்டுகளுக்கு முன்பு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் தனது கள்ளக்காதலன் அரசுக்காக லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நியாயம் கேட்க சென்ற வீடியோ வைரலானது.
அந்த பிரச்னையின் போது சில நாட்கள் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியான நிலயில், மீண்டும் தற்போது பார்முக்கு வந்து இருக்கிறார் அன்னபூரணி அரசு அம்மா.
செங்கல்பட்டில் நடக்க இருந்த அன்னபூரணி அரசு அம்மாவின் அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதோடு, காவல்துறை, வழக்கு, விசாரணை என பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், அம்மா எனர்ஜி தர்ஷன் என்ற பெயரில் தனது குழந்தைகளை காண வரப்போவதாக மீண்டும் அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள சுதானந்த ஆசிரமத்தில் வரும் ஏப்ரல் 3ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கும் எனர்ஜி தர்ஷன் அருள்பாலிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் தலா 700 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஏப்ரல் 1ம் தேதியுடன் இந்த முன்பதிவு முடிவடையும் எந்த காரணம் கொண்டும் கட்டணத்தை திரும்ப வழங்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தி பரவசத்துடன் அன்னபூரணி அருள் வாக்கு சொல்லும் வீடியோக்கள் காவல்துறை வரை சென்றதால் ஜனவரி 1ம் தேதி நடைபெறவிருந்த திவ்ய தரிசனம் ரத்தானது.